நடிகர் பொன்னம்பலத்துக்கு என்ன ஆச்சு ?? அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி !! அ தி ர் ச்சியில் திரையுலகம் !!

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். 1988 ஆம் ஆண்டு, ‘கலியுகம்’ என்கிற படத்தில், ஜெயில் கைதியாக அறிமுகமான, இவர் அதன்பின்னர் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என அப்போதிருந்த முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இன்றி இருந்து வந்த இவர், நடிகர் கமல் தொகுத்து வழங்கிய தனியார் டிவி நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் சிகிச்சைக்கு தற்போது நடிகர் கமல்ஹாசன் உதவி வருகிறார். பொன்னம்பலத்திடம் கமல் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகர் பொன்னம்பலத்தின் நிதி சுமையை கருத்தில் கொண்டு அவரின் 2குழந்தைகளின் படிப்பு செலவினை கமல்ஹாசனே ஏற்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு கார்த்தி என்ற மகனும் கிரித்திகா என்ற மகளும் உள்ளனர்.

 

Comments are closed.