பிக்பாஸ்4 நிகழ்ச்சியை இனிமேல் தொகுத்து வழங்கப்போவது யார் தெரியுமா ..?? அட நம்ப சமந்தா தானா அது ..?? வெளியானது அதிகார பூர்வமான உண்மை ..!!

பிக்பாஸ் சீசன் 1 ஆரம்பித்து தற்பொழுது சீசன் 4 வரை வெற்றிகரமாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழில் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.தமிழ் பிக்பாஸ் எந்தளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு தெலுங்குவில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். தமிழில் எப்படி கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரோ அதேபோல தெலுங்கு பிக்பாஸ்ஸை தொகுத்து வழங்குபவர் பிரபல நடிகர் நாகார்ஜுன். தற்பொழுது நாகஅர்ஜுன் வைல்ட் டார்க் என்ற படத்தின் சூட்டிங் ஆரம்பித்ததால் திடீரென்று ஷூட்டிங்கிற்காக விடுப்பு எடுத்து உள்ளார்.நாகர்ஜுன் சில தினங்களுக்கு முன்பு சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியிட்ட வீடியோ வெளியிட்டார். நாகர்ஜுன் தொகுத்து வழங்காமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்று ரசிகர்களிடம் பெரும் குழப்பம் இருந்தது. இதற்கு முன் நடந்த சீசன் ஒன்றில் நாகஅர்ஜுன் பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு சில காரணங்களால் வெளியேறிய போது பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

 

நாகர்ஜுன் இல்லாத நேரத்தில் ஒரு வேளை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று ரசிகர்கள் கணித்தார்கள் ஆனால் ரசிகர்கள் மட்டும் இல்லை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கே   அ தி ர் ச் சி   கொடுக்கும் வகையில் பிக்பாஸை தொகுத்து வழங்க நடிகை சமந்தா என்ட்ரி கொடுத்துள்ளார்.

நாளை முதல் சமந்தா சில வாரங்களுக்கு தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாமனார் இடத்தில் மருமகளா என்று ஆவலுடன் சமந்தாவை ரசிகர்கள் பார்க்க இருக்கின்றனர்.

 


Comments are closed.